என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் பறிப்பு
தொழிலாளியிடம் பணம் பறிப்பு
கத்திமுனையில் மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 61). கூலி தொழிலாளி யான இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அல்லம் பட்டியை சேர்ந்த சோலை ராஜ் (26), பாலமுருகன் (43), சுகன்ராஜ் (23), மைக்கேல் உள்பட 5 பேர் வந்தனர். அவர்கள் பழனியப்பனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1000 பணத்தை பறித்தனர்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பழனியப்பன் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோலைராஜ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள் மற்றும் ரூ.1000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






