search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டை மற்றும் கார்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டை மற்றும் கார்.

    பள்ளிகொண்டா அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்திய 39 மூட்டை குட்கா பறிமுதல்

    பள்ளிகொண்டா அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்திய 39 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    கர்நாடக மாநிலம் பெங் களூரு உள் ளிட்ட பகு திகளில் இருந்து சென் னைக்கு கார் லாரிகள் மூலம் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறது.இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் இரவு நேரங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூர் & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே எஸ்.பி. தனிப்படையினர் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த மினி லாரியில் சோதனையிட்டனர். அதில் 9 மூட்டைகளில் குட்கா பான்மசாலா உள்ளிட்ட 112 கிலோ போதைப் பொருட்கள் இருந்தன.

    இதனை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் இமிடி நாயக்கன பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

    இவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல விரிஞ்சிபுரத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த காரில் சோதனை நடத்தினர். அதில் 30 மூட்டைகளில் சுமார் 200 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த குட்கா பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×