என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி
Byமாலை மலர்23 April 2022 10:21 AM GMT (Updated: 23 April 2022 10:21 AM GMT)
திருவாரூரில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில செய்திமக்கள் தொடர்புதுறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ மாணவிகள் கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வகையில் இந்தநகரும் புகைப்படக் கண்காட்சி திருவாரூர் வேலுடையார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி, திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, கஸ்தூர்பாகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளி, மடப்புரம் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இன்று மன்னார்குடியில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளியமுறையில் விளக்கப்படும். முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்-பட்டுள்ள அண்ணாரின் திருவுருவசிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் காயத்ரி-கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகரமன்ற தலைவர் எஸ்.புவனபிரியா செந்தில், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X