என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
3 மாதங்களில் 68 பாம்புகள் பிடித்த தீயணைப்புத்துறை வீரர்கள்
மூன்று மாதங்களில், 68 பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகளையும், வனப்பகுதியையும் சூழ்ந்துள்ளதால், விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது.
இதில் மான், மலைப்பாம்பு மட்டுமின்றி நாகப்பாம்பு, கண்ணாடிவிரியன் உள்ளிட்ட விஷப்பாம்பு களும் அடிக்கடி வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இவற்றை வனத்துறை அலுலர்கள் பிடித்து காப்புக்காட்டில் விடுகின்றனர்.
புதிதாக இப்பணியில் தீயணைப்புத்துறை வீரர்களும் இணைந்துள்ளனர். வனத்து றையில் புகார் தெரிவிக்க பொதுவான தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாததால், தீயணைப்புத் துறையின், 101 என்ற எண்ணிற்கு கால் செய்வது பொது மக்களுக்கு பழக்க மாகி வருகிறது.
கடந்த ஜனவரி 1 முதல் மார்ச், 31 வரை தீயணைப்புத் துறை வீரர்கள், வீடு மற்றும் தோட்டத்திற்குள் புகுந்த நாகப்பாம்பு, கண்ணாடிவிரியன் உள்ளிட்ட 68 பாம்புகளைப் பிடித்து காட்டிற்குள் விட்டுள்ளனர்.
இது குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் கூறியதாவது:-&
வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதால், யாருக்கு தகவல் தெரிவிப்பது என்று தெரியாமல் அனைவருக்கும் தெரிந்த, 101 என்ற எண்ணில் எங்களை அழைக்கின்றனர்.
நாங்கள் 24 மணி நேரமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். பாம்புகளை பிடிக்க கருவிகளையும் நாங்களே தயார் செய்து வைத்துள்ளோம். வீடுகளில் புகுந்துவிடும் பாம்புகள் மட்டுமின்றி, கிணற்றில் விழுந்துவிடும், நாய், பூனை, மான், காட்டுப்பன்றிகள் போன்றவற்றையும் மீட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






