என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூஷ்ணா, விஜயன்
மனைவியை அடித்துக் கொன்ற மேஸ்திரியை பிடிக்க ஆந்திராவில் வேட்டை
பேரணாம்பட்டு அருகே மனைவியை அடித்துக் கொன்ற மேஸ்திரியை போலீசார் தேடி வருகின்றனர்
பேர்ணாம்பட்டு:
குடியாத்தத்தை அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பூஷ்ணா (45).கட்டிட வேலை செய்து வந்தார். திருமணமான சில ஆண்டுகளிலேயே விஜயன் தனது மனைவி பூஷ்ணாவின் சொந்த கிராமமான பாஸ் மார்பெண்டா மலை கிராமத்திற்கு வந்து வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து. வந்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த 3 நாட்களாக இருவரும் கட்டிட வேலைக்கு செல்லவில்லை.
பூஷ்ணாவின் வீட்டிற்கு அவரது மருமகன் முருகன் என்பவர் நேற்று சென்றார். தலை கழுத்து பகுதியில் கட்டையால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் பூஷ்ணா பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து முருகன் அதிர்ச்சி அடைந்தார். பூஷ்ணாவின் கணவர் விஜயனை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ராமமூர்த்தி பேர்ணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாரத்தினம் கேசவன் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட பூர்ணாவின் உடலை கைப்பற்றி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பூஷ்ணாவை அவரது கணவர் விஜயன் கொலை செய்து விட்டு தலைமறை வானது தெரிய வந்தது.
மனைவியை கொலை செய்து விட்டு விஜயன் ஆந்திரா தப்பிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. விஜயனை ஆந்திரா மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






