என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மரக்காணத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கும்பாபிஷேக விழா- பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்
Byமாலை மலர்22 April 2022 10:40 AM GMT (Updated: 22 April 2022 10:40 AM GMT)
கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா ஆராதனை செய்யப்பட்டது.
மரக்காணம்:
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார்.
கடந்த 20-ந் தேதி ஆரம்பித்த மூன்று கால வேள்வி பூஜை நேற்று காலை 4.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று காலை 10 மணிக்கு பங்காரு அடிகளார் கோபுர கலசத்திற்கு வேள்வியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்தார். தொடர்ச்சியாக பல்வேறு திருஷ்டிகள் செய்யப்பட்டது.
பின்னர் சக்தி கொடியை கோபுர கலசத்தில் பங்காரு அடிகளார் பொருத்தினார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா ஆராதனை செய்யப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார்.
கடந்த 20-ந் தேதி ஆரம்பித்த மூன்று கால வேள்வி பூஜை நேற்று காலை 4.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
நேற்று காலை 10 மணிக்கு பங்காரு அடிகளார் கோபுர கலசத்திற்கு வேள்வியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்தார். தொடர்ச்சியாக பல்வேறு திருஷ்டிகள் செய்யப்பட்டது.
பின்னர் சக்தி கொடியை கோபுர கலசத்தில் பங்காரு அடிகளார் பொருத்தினார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா ஆராதனை செய்யப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X