என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை
பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் 10 விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த கருக்கன்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (58). இவரது மனைவி முத்து லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
குமாரசாமி பெருந்துறை சிப்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் முகவர் முதல் நிலையில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து உடல் நலம் சரியில்லாத காரணத் தினால் கடந்த 11 மாதங் களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
தொடர்ந்து மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணம் அடையாததால் கடந்த சில நாட்களாகவே குமாரசாமி மனவேதனை-யுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்-தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்த குமரசாமி வீட்டில் இருந்த 10 சல்பாஸ் (விஷ)மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து முத்துலட்சுமி கேட்டபோது தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக குமாரசாமி கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவி-யுடன் கணவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்-சைக்காக அனுமதித்தனர்.
அங்கு குமாரசாமியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக பெருந்-துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ-தித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குமார-சாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






