search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிட் குடித்த டிராவல்ஸ் உரிமையாளர்
    X
    ஆசிட் குடித்த டிராவல்ஸ் உரிமையாளர்

    நெல்லை அருகே போலீஸ் நிலையத்தில் ஆசிட் குடித்த டிராவல்ஸ் உரிமையாளர்

    நெல்லை அருகே போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது ஆசிட் குடித்த டிராவல்ஸ் உரிமையாளருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மகன் ஜியோட்டர்(வயது 26).

    இவர் சொந்தமாக கார்கள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. அதே பகுதியில் 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கும், ஜியோட்டருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    அதே நேரத்தில் ஜியோட்டரையும் காணவில்லை. இதனால் 2 பேரும் சேர்ந்து எங்காவது சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் 2 பேரையும் போலீசார் நேற்று தேடி கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை உவரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர்.

    அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜியோட்டர் போலீஸ் நிலைய கழிவறையை சுத்தப்படுத்துவற்காக வைக்கப்பட்டு இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×