search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
    X
    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்-ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை

    வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும்

    அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதிகள் பின்வருமாறு, விண்ணப்பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்த-பட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து

    பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டு இருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும் , பெண்களின்

    முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் எழுத்-துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ

    மற்றொருவர் பரிந்துரைஅடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்-ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின்

    முடிவே இறுதியானது.மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விபரங்கள் மற்றும் அவற்றிற்கு உரிய ஆவணங்களுடன் இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத் துறை,

    தலைமை செயலகம்,சென்னை- 600009 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×