என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Byமாலை மலர்21 April 2022 10:32 AM GMT (Updated: 21 April 2022 10:32 AM GMT)
கலைஞர் எழுதுகோல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்-ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை
வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும்
அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதிகள் பின்வருமாறு, விண்ணப்பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்த-பட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து
பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டு இருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும் , பெண்களின்
முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் எழுத்-துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ
மற்றொருவர் பரிந்துரைஅடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்-ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின்
முடிவே இறுதியானது.மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விபரங்கள் மற்றும் அவற்றிற்கு உரிய ஆவணங்களுடன் இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமை செயலகம்,சென்னை- 600009 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X