என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 850 பேர் மீது வழக்கு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் பொது மக்களுக்கு இடையூறுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவானால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அது குறித்து உடனடியாக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், புதிய காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.
அந்த எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில். கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்து வோரை கட்டுப்படுத்தும் விதமாக காவல் அதிகாரிகள் , காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் போலீசாரின் அறிவுரையை பின்பற்றாத 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்தி விட்டு அதன் காரணமாக ஏற்படும் காய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்