என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
பெருந்துறை அருகே குழந்தை இல்லாததால் இளம்பெண் விஷ குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பெருந்துறை அருகே குழந்தை இல்லாததால் இளம்பெண் விஷ குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கோகிலாம்பாள். இவர்களது மகள் சந்தியா (வயது 26).
கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சந்தியா அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சந்தியா மற்றும் கார்த்திக் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக இருவரும் சிகிச்சை எடுத்து வந்தனர்.
எனினும் குழந்தை இல்லை என்ற மன உளைச்சலில் சந்தியா இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சம்பவத்தன்று சந்தியா விஷ மாத்திரை தின்று வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்து கேட்டதற்கு தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறிவிட்டு மயங்கினார்.
உடனடியாக சந்தியாவை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






