என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வேப்பனப்பள்ளி அருகே பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்தவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்தவர் கைது செய் யப்பட்டார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சந்தியா (வயது 19).
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியா வீட்டில் தனியாக இருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (28) என்பவர் சந்தியாவிடம் பாலியல் தொல்லை கொடுத் துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று மாலை இந்த சம்பவம் தொடர்பாக சுரேசிடம் சந்தியாவின் கணவர் சீனிவாசன் தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ், சீனிவாசனை தாக்கியதில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதைதொடர்ந்து சந்தியா அளித்த புகாரின் பெயரில் வேப்பனப் பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
Next Story






