என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா விற்குட்பட்ட அகலகோட்டை அருகே உள்ள வனகனப் பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் முரளி (வயது 23). 

    சம்பவத்தன்று இவர் இரவு மோட்டார் சைக்கிளில்  சென்றார். அப்போது வனகனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென அவர் தவறி கீழே விழுந்து படு காயம் அடைந்தார். 

    உடனே அவரை  அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர். அங்கி ருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்ட முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×