என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    அந்தியூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரது மகன் சரன்ராஜ் (வயது 21). சரன்ராஜ் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தாயுடன் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் சரன்ராஜ் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சரண்ராஜ் தவறி கீழே விழுந்து கால் தொடையில் காயம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சரண்ராஜ் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த செல்வி மகன் அறையை பார்த்த போது சரண்ராஜ் தூக்குபோட்டு கொண்டு தூங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×