என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடராஜர் சப்பரத்தில் வீதி உலா வந்த காட்சி.
சிவரியில் நடராஜர் சப்பரத்தில் திருவீதி உலா
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
சிவகிரி:
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 17-ந் தேதி தேர் நிலை சேர்ந்தது.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜர் தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிவகிரி ஆதீனம் தலைமையில் கோமாதா பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு ஆடவல்லான் நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு விடையாற்றி உற்ச வத்துடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
Next Story






