என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடராஜர் சப்பரத்தில் வீதி உலா வந்த காட்சி.
    X
    நடராஜர் சப்பரத்தில் வீதி உலா வந்த காட்சி.

    சிவரியில் நடராஜர் சப்பரத்தில் திருவீதி உலா

    சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.
    சிவகிரி:

    சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.

    சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த  16-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று நடைபெற்றது. 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 17-ந் தேதி தேர் நிலை சேர்ந்தது.

    தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜர் தரிசன நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிவகிரி ஆதீனம் தலைமையில் கோமாதா பூஜை நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு ஆடவல்லான் நடராஜருக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு விடையாற்றி உற்ச வத்துடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×