search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே மலைப்பகுதியில் சாராய ஊறல் அழிப்பு
    X
    செஞ்சி அருகே மலைப்பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

    செஞ்சி அருகே மலைப்பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

    செஞ்சி அருகே மலைப்பகுதியில் மூன்று பேர்களில் சுமார் 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திதிரன் மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா நல்லான்பிள்ளை பெற்றாள் சப் இன்ஸ்பெக்டர் திவாகர் தனிப்பிரிவு பாரதி மற்றும் போலீசார் போத்துவாய் கிராமத்தில் உள்ள கஞ்சூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது மலைப்பகுதியில் பேரல்களில் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தரம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களும் இருந்தன. அங்கிருந்த மூன்று பேர்களில் சுமார் 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர், மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாராயம் காய்ச்ச முயன்ற நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×