என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய நிர்வாகிகள்  அறிவிப்பு,
    X
    புதிய நிர்வாகிகள் அறிவிப்பு,

    புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

    விருதுநகர் நகர, ஒன்றிய அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
    விருதுநகர்

    அ.தி-.மு.க.வில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. 3வது கட்டஅமைப்பு தேர்தல்கள்  தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக பலரும் வேட்புமனுதாக்கல் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுக்கள் பெறப்பட்டன.

     இதனைத்தொடர்ந்து தற்போது புதிய நிர்வாகிகள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    அதன்படி விருதுநகர் நகர செயலாளராக முகம்மது நெய்னார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக ஜெயபாண்டி, இணைச் செயலாளராக மாரீஸ்வரி, துணை செயலாளர்களாக ஜோதிராணி, கண்ணன், பொருளாளராக ஸ்ரீதரன், மாவட்ட பிரதிநிதிகளாக அன்னலட்சுமி, சக்திவேல் சுரேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

     இதேபோல் மேற்குமாவட்டத்திற்கு உட்பட்ட  ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
    ஒன்றிய செயலாளர்களாக தர்மலிங்கம் (விருதுநகர் கிழக்கு), கண்ணன் (மேற்கு),  மச்சராஜா (வடக்கு) அறிவிக்கப் பட்டுள்ளனர்.

    அவைத்தலைவர்களாக பாலகிருஷ்ணன் (கிழக்கு), பாலமுருகன் (மேற்கு), சுந்தரபாண்டியன் (வடக்கு) ஆகியோரும், இணைச் செயலாளர்களாக அனுசுயா (கிழக்கு), ராஜேஸ்வரி  (மேற்கு), நாகலட்சுமி (வடக்கு) ஆகியோரும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

    பொருளாளராக ராஜேந்திரன் (கிழக்கு), செல்வகுமார் (மேற்கு) பாண்டியராஜன் (வடக்கு) அறிவிக்கப்பட்டு உள்ளனர். துணைச் செயலாளர்களாக காளீஸ்வரி, வேலுச்சாமி (கிழக்கு), கனகவள்ளி, செந்தில்குமார் (மேற்கு), நாச்சியம்மாள், அன்புராஜ் (வடக்கு).

    மாவட்ட பிரதிநிதிகளாக ரேவதி, சுப்பையா, நடராஜன் (கிழக்கு), பேச்சியம்மாள், கணேசமூர்த்தி, சுப்புராஜ் (மேற்கு), ராஜாத்தி, சின்னச்சாமி, கண்ணன் (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×