என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
மத்தூர்,
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பஞ்சாயத்து துணை தலைவர் சரவணன் (வயது51). இவருடைய நண்பரான நாயக்கனூர் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (50) ஆகிய இவர்கள் நேற்று புல்லட்டில் ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாம்பாறு டேம் அருகே வந்த போது எதிரே செல்வேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக புல்லட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயராஜை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






