என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூக்குழி திருவிழா.
கோவில் திருவிழா
விருதுநகர் அருகே வத்திராயிருப்பு கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள பழமை வாய்ந்த மந்தைமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா 2ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
கடந்த 4-ந்தேதி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
Next Story






