என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி
வேப்பூரில் தூக்குப்போட்டு வாலிபர் பலி
வேப்பூரில் தூக்குப்போட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் வினோத் (வயது 24). இவர் கடந்த 2 வாரங் களாகவே உடல் நிலை சரி இல்லாமல் வீட்டில் அவதிபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது வினோத் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வினோத் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






