என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் பலாத்காரம்
    X
    பெண் பலாத்காரம்

    இளம்பெண் பலாத்காரம் செய்ய முயற்சி

    சிவகாசி அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் மனைவியுடன் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் எட்டக்காபட்டியில் தங்கியிருந்து பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வருகிறார்.

    தமிழகத்துக்கு வந்து சிலமாதங்களே ஆவதால் அவருக்கு தமிழ் சரளமாக பேசதெரியாது. அந்த வாலிபர் தனது மனைவியுடன் சம்பவத்தன்று வீட்டின் வாசற்படியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அங்கு எதிர் கோட்டையைச் சேர்ந்த பூவரசன், காசி ஆகிய 2பேர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
    அசாம் வாலிபரின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தருமாறு கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

    இதையடுத்து அசாம் வாலிபர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன், காசி ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அசாம் வாலிபர் மனைவியின் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதனால் அந்தப்பெண் கூக்குரலிட்டார்.
    Next Story
    ×