search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

    முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், முள்ளங்குறிச்சி அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    புதுக்கோட்டை, சிவகங்கை மதுரை, மணப்பாறை, திருச்சி கந்தர்வகோட்டை கோமாபுரம் ஆகிய ஊர்களிலிருந்து 900 காளைளுடன் 200 காளையர்கள் கலந்து கொண்டனர். காளைக்கும் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் தங்ககாசு, வெள்ளிகாசு பீரோ கட்டில் பேன், மிக்சி, சைக்கிள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு ரவி, கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன்காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பிலாவிடுதி ஊராட்சி மன்றத் தலைவர் நாட்டு அம்பலகாரருமான விஜயரவி பல்லவராயர்,

    கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தவ.பாஞ்சாலன், கறம்பக்குடி பேருராட்சி தலைவரும், நகர தி.மு.க.செயலாளர் உ.முருகேசன், முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் காந்திமதி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    ஜல்லிக்கடடில் கலந்து கொண்ட 50  வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது, விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முள்ளங்குறிச்சி பொது மக்கள் செய்தார்கள்.
    Next Story
    ×