என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குலசேகரம் அருகே வேலைக்கு சென்ற முதியவர் மாயம்
குலசேகரம் அருகே வேலைக்கு சென்ற முதியவர் மாயமானார்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே மாமூடு பகுதியை சேர்ந் தவர் முத்துசாமி (வயது75).
இவருக்கு சொர்ணம் (70) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவரும் மனைவியும் தனியாக வசித்து வந்தனர்.
இவர் குலசேகரம் அருகே தனியார் மதுபான கூடத்தில் வேலை பார்த்து வந்தார். இரண்டு நாள்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை.
இதனால் இவர் மனைவி குல சேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன முதியவரை தேடி வருகிறார்கள்.
Next Story






