என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரியில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் 3 டன் ரேசன் அரிசியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரியில் -திருவண்ணாமலை சாலையில் ராசுவீதி பகுதியில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில்ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத் திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த மினிலாரி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 62 மூட்டைகளில் 3100 கிலோ ரேசன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகாவிற்கு அதிக விலைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், லாரியின் டிரைவரான கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்த பரத், ரேசன் அரிசியின் உரிமையாளரான கிருஷ்ணகிரி சீனிவாசா காலனியை சேர்ந்த அமரீஷ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும், ரேசன் அரிசி, மினி லாரி உள்ளிட் டவையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






