என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காட்பாடி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை
Byமாலை மலர்17 April 2022 9:36 AM GMT (Updated: 17 April 2022 9:36 AM GMT)
காட்பாடி கிளித்தான் பட்டறையில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
வேலூர்:
காட்பாடி கிளிதான் பட்டறையை சேர்ந்தவர் ராமன் (வயது 45).இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்கிற குள்ளன். நண்பர்களான இருவரும் கிளிதான் பட்டறையில் உள்ள தனியார் தங்கும் விடுதி அருகே மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராமனை சரமாரியாக தாக்கினார்.
இதில் ராமனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வத்திடம் என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X