search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அமலுவிஜயன், ஏ.சி.வில்வநாதன் பங்கேற்றனர்.
    X
    நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அமலுவிஜயன், ஏ.சி.வில்வநாதன் பங்கேற்றனர்.

    குடியாத்தத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளி காட்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

    குடியாத்தத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளி காட்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி கருத்தரங்க மண்டபத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியம் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சிகள் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய குடியாத்தம் கோட்ட செயற்பொறியாளர் வி.எம்.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறி யாளர்கள் ஆர்.சீனிவாசன் பி. வெங்கடேசன், பி.பெருமாள், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் பிரபு, ஜோதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் மாலினி ஜோதிராம் அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஆம்பூர் எம்.எல்.ஏ. ஏ.சி. வில்வநாதன், குடியாத்தம் தாசில்தார் லலிதா, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள்.

    ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு முதல்வர் பேசிய வாழ்த்துரை நிகழ்ச்சி அனைவரும் கண்டுகளித்தனர்.
     
    தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளிடமும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடமும் பேசினார்கள் அப்போது பேசிய அதிகாரிகள் குடியாத்தம் கோட்டத்தில் 309 விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மின்னிணைப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர் முடிவில் இளநிலை பொறியாளர் முத்துராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×