என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
38 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்17 April 2022 9:17 AM GMT (Updated: 17 April 2022 9:17 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பதுக்கி வைத்திருந்த 38 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இலந்தைகுளத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் நத்தம்பட்டி சப்இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் நத்தம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது இலந்தைகுளம் நடுத்தெருவில் கடை வைத்திருந்த ஞானசேகர் தனது கடைக்குள் 3 வெள்ளை நிற சாக்குப் பையில் பேப்பர் போட்டு மறைக்க முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் பரிசோதித்தபோது அந்த மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 38 கிலோ இருந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர் ஞானசேகர் மற்றும் அவருக்கு உதவிய அயன் கரிசல்குளத்தை சேர்ந்த முத்துவேல் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த ரூ45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் வைத் திருந்த 15 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X