என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆரணி அருகே மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்பு
Byமாலை மலர்17 April 2022 8:44 AM GMT (Updated: 17 April 2022 8:44 AM GMT)
ஆரணி அருகே மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
ஆரணி:
ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 70). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.
மேரியின் மகன் சகாயநாதன் உறவினர் வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் இவரைத் தேடி உள்ளார். மேரி கிடைக்காததால் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் மூதாட்டி ஒருவர் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது மாயமான மேரி என தெரியவந்தது.
உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்-காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேரி ஏரி க்கு எதற்காக சென்றார் தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X