search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள
    X
    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. திருத்தலத்தின் பங்குத் தந்தை இசையாஸ்  திருப்பலி பூஜைகளை நிறைவேற்றி வைத்தார்.

    இதன் முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து மூன்றாவது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, இயோசுவை வரவேற்கும் வகை யில் அனைவரும் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இந்த சிறப்பு திருப்பலியின் போது, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும்மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×