என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காட்பாடியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி பா.ம.க.ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 April 2022 10:27 AM GMT (Updated: 16 April 2022 10:27 AM GMT)
காட்பாடியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி பா.ம.க.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
பா.ம.க சார்பில் மத்திய ரெயில்வே மந்திரியாக வேலு இருந்தபோது அறிவிக்கப்பட்ட ரெயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி இன்று காட்பாடி ரெயில் நிலையம் முன்பாக பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்-திற்கு பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் பி. கே.வெங்கடேசன், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மந்திரியாக இருந்த வேலு திண்டிவனம்-நகரி, திருவண்ணாமலை -திண்டிவனம், தர்மபுரி-மொரப்பூர், ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, சென்னை- மகாபலிபுரம்- கடலூர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெயில்வே திட்ட பணிகளை அறிவித்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பாபி கதிரவன் காட்பாடி ஒன்றிய செயலாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X