search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    செல்போன் டவரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் திருட்டு

    செல்போன் டவரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி :

    திருச்சி எடமலைப்பட்டி புதூர்  பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது. இந்த டவரில் உள்ள ஜெனரேட்டர் ஸ்டெபிலைசர் பேட்டரி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். 

    இதுபற்றி அந்த நிறுவனத்தின் சென்னை மேலாளர் சுரேஷ்குமார் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். திருட்டுப்போன மொத்தம் பொருட்களின் மதிப்பு ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்து 388 ஆகும் இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் பேபிமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×