என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னமராவதியில் மீன்பிடி திருவிழா
Byமாலை மலர்16 April 2022 10:12 AM GMT (Updated: 16 April 2022 10:12 AM GMT)
பொன்னமராவதியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும்.
மீன்படி திருவிழா கொரோனா பெறுந்-தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை இன்னிலையில் இன்று ரெட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திரு-விழாவில்
பொன்னமராவதி, ஆலவயல்,அம்மன்குறிச்சி, நகரப்பட்டி,மூலங்குடி, கண்டியானத்தம்,அரசமலை, காரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா,வலை,தூரி, கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்-தொடங்கினர்.
அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன இருப்பினும் போதிய மழையில்லாததால் மீன் பெருக்காமல் அரைக்கிலோவுக்கு எடை கொண்டை மீன்கள் மட்டுமே -கிடைத்தன. பொன்னமராவதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 முதல் 3 கிலோ எடை கொண்ட மீன்கள் கிடைத்தது குறிப்பிடதக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X