search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதனக்கோட்டையில் எம்.ஏல்.ஏ சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
    X
    ஆதனக்கோட்டையில் எம்.ஏல்.ஏ சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

    சாலை வசதி செய்து தரகோரி ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதனக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.  

    ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை ஒன்றியம் கல்லுக்காரன் பட்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குடியிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவும்,

    கல்லுகாரன்பட்டி பேருந்து நிலையத்தை  சீரமைத்தும்,  சாலை வசதிகள் செய்து தரவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கர், ராமையன், இலட்சாதிபதி, அன்பு மணவாளன், கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×