search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    ஜடாமுனீவரர் கோவிலில் கும்பாபிஷேகம்

    ஜடாமுனீவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா காரைக்குடி சாலையில் அமைந்து  ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. 

    இதற்காக யாகசாலை அமைத்து 14 ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து  2 இரண்டுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடை-பெற்றது.

    கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சிவாச்-சாரி சிவக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் -ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் ராஜகோபால்,முனி ரெத்தினம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×