search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    X
    கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

    கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கீழக்கடையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    கடையம்:

    கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கீழக்கடையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் முன்னிலை வகித்தார். 

    கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். 

    விழாவில் மருத்துவர் கவிதா, கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் மாரிக்குமார், சுகாதார ஆய்வாளர் மூலநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×