என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரெயிலில் இருந்து தவிறி விழுந்த 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்16 April 2022 9:49 AM GMT (Updated: 16 April 2022 9:49 AM GMT)
ரெயிலில் இருந்து தவிறி விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
திருச்சி:
சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடிக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6.05 மணிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரெயில்வே கேட் அருகில் வந்தபோது ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் திடீரென ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.
இதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டு உடனடியாக ரெயிலை நிறுத்தி பார்த்த போது, கீழே விழுந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் ரெயில்வே போலீசார் விசாரித்ததில், உயிரிழந்தவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த அருண் (வயது 22) என்பது தெரியவந்தது.
மற்றொரு வாலிபர் யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த 2 வாரிபர்களின் உடலைகளையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X