search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி‌ஷம்
    X
    வி‌ஷம்

    கள்ளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

    கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். அவரது மனைவி பத்மாவதி என்கிற பிரியா (வயது 19) . பத்மாவதிக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சுரேந்திரன் வங்கிப் பணிக்கு சென்று விட்ட நிலையில் பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வாந்தி எடுத்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தார்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர். டி. ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×