search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதோ‌ஷ வழிபாடு
    X
    பிரதோ‌ஷ வழிபாடு

    தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோ‌ஷ வழிபாடு

    தியாகதுருகம் பகுதி சிவன் கோவில்களில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பிரசித்திபெற்ற நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோ‌ஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று சனி பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தீஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தியாகதுருகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் யோகநாயகி உடனுறை ஆத்மநாதசுவாமி கோவில், வடதொரசலூர் பெரியநாயகி உடனுறை பழமலை நாதர் கோவில், எறஞ்சி காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில், வடபூண்டி கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில், திம்மலை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில், குடியநல் லூர் கைலாசநாதர் கோவில், முடியனூர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவில், கனங்கூர் பர்வதவர்த்தினி சமேத இராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் சனி பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது.

    Next Story
    ×