என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
கடலூர் அருகே தனியார் பஸ்சை மறித்து மிரட்டிய வாலிபர் கைது
கடலூர் அருகே தனியார் பஸ்சை மறித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி புதுக்கடை பகுதியில் தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென்று தனியார் பஸ்சை கட்டையை காண்பித்து வழிமறித்தார். பின்னர் ஏன் பஸ்சை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேட்டு ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் நந்தகுமாரவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






