search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
    X
    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

    எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்

    எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    புதுக்கோட்டை:

    சொத்து வரி, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி நகர செயலாளர் அப்துல்ரஜாக் தலைமை தாங்கினார். 

    மாவட்ட மருத்துவ சேவை அணி தலைவர்  ஜமால்முகமது, ஆலங்குடி தொகுதி துணை தலைவர் ராயல்கனி, நகர பொருளாளர் அமீர்தீன், ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாவட்ட தலைவர் ஜலாஹீதின் கண்டன உரை நிகழ்த்தினார்.  நகர தலைவர் காரீயம்மைதீன் நன்றி கூறினார். கட்சியின் நகர கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×