search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி
    X
    பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி

    கிறிஸ்தவ ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

    கிறிஸ்தவ ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    இயேசு சிலைவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தகவக்காலமாக கடைவிடித்து வருகின்றனர். இந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். 

    அதன்படி கடந்த மாதம் 2 ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. இதனையடுத்து ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பை கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த 10&ந் தேதி குருத்தோலை பவனி நடந்தது.

    இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஆலங்குடி  புனித அதிசய அன்னை தேவாலயத்தில்  குழந்தைசாமி தலைமையிலும், உதவி பங்குத்தந்தை கித்தேரிமுதது முன்னிலையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×