search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வேன் மோதி வாலிபர் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியானார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்ன மட்டார பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களது மகன் தேவேந்திரன் (வயது 31).

    இந்த நிலையில் கடந்த 12 ந் தேதி தேவேந்திரன், வரட்டனப்பள்ளி  குப்பம் சாலையில் மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவேந்திரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×