என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சேத்துப்பட்டு அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டு அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தத்தனூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் பஞ்சவர்ணம் தீட்டப்பட்டு இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்டது.
பின்னர் புனிதநீர் சிவாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் மீது உள்ள கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினர்.
அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story






