என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவி, மாமியாரை வெட்டி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    கீழ்பென்னாத்தூர் அருகே குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவி, மாமியாரை வெட்டி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை அடுத்த கோடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு 4 வயதில் மகன் மற்றும் 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

    கர்ப்பிணியாக இருந்த போது சசிகலா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். பின்னர் 8 மாத கைக்குழந்தையுடன் தனது தாயார் வீட்டிலேயே தங்கினார். சசிகலாவை தொடர்புகொண்டு ராமசாமி தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் நேற்று இரவு தனது மாமியார் வீடான சோ நம்மியந்தலுக்கு நேற்று இரவு சென்றார்.

    அப்போது சசிகலாவை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி சசிகலாவை தாக்கி அரிவாளால் வெட்டியுள் ளார்.

    தடுக்க வந்த மாமியார் ஞானாம்பாளுக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந் தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணைக் காக ராமசாமியை தேடி போலீசார் வட்ரா புதூர் கிராமத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது ராமசாமி அங்கு தூக்கில் பிணமாக தொங்கி நிலையில் கிடந்தார். 

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×