என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    3.5 டன் ரேசன் அரிசி லாரியுடன் பறிமுதல்

    3.5 டன் ரேசன் அரிசி யை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை குடிமை பொருட் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையில் போலீசார் திருமயம் தாலுகா, கல்லூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
     
    அங்கு சென்று விசாரிக்கையில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக ஏற்றிக் கொண்டு இருந்ததை தெரியவந்தது. இதனையடுத்து லாரியுடன் 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தெக்கூர் செல்வம், லாரி டிரைவர் வேல்பாபுவை கைது செய்தனர். தப்பியோடிய செல்வி மற்றும் சதீஷ்குமாரை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×