என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 4 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வேலா வள்ளி பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 59),  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சிவா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப் படுகிறது.
      
    இதனையடுத்து கடந்த 12 ந் தேதி வழி தகராறு காரணமாக கலையரசியை சிவா அவரது மகன்கள் வேலவன் (22), ஹரீஷ் (20), வேலவன் மனைவி சுதா (25) , சிவாவின் மனைவி தவமணி (48) ஆகிய 4 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், கட்டையாலும், கையாளும் தாக்கினர். இதில் படுகாயடைந்த கலையரசி மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந் தார்.  பின்னர் மேல்சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத் துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். 

    இது குறித்து கலையரசி மத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித் தனர். அதன் பேரில் சிவா அவரது மகன்கள் வேல வன், ஹரீஷ், மருமகள் சுதா, மனைவி தவமணி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தவமணி, சுதா ஆகிய இருவரையும் சேலம் மகளிர் சிறையிலும், வேலவன், ஹரீஷ் ஆகிய இருவரையும் கிருஷ் ணகிரி கிளை சிறையிலும் அடைத்தனர். தலை மறைவான சிவாவை மத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×