என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

    பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார்  ஐடிஐ ல் படித்து, அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,- மாணவியர்-களுக்காக வருகின்ற 21&-ந் தேதி -காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.  

    இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்-கள் கலந்து-கொண்டு தங்களது நிறுவனங்-களுக்கு தேவையான தொழில் பழகுநர்-களை தேர்வு செய்ய உள்ளனர்.  

    இதில் கலந்து-கொள்ள உள்ள மாணவ,-மாணவியர்-கள் தங்களது அசல் கல்விச் சான்றி-தழ்களை கொண்டுவர வேண்டும்.  

    தொழில் பழகுநராக தேர்வு செய்யப்-படும் மாணவ, மாணவியர்-களுக்காக மாதந்-தோறும் உதவித்-தொகை வழங்கப்படும்.  தொழில் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்-துள்ளார்.

     
     
    Next Story
    ×