என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளிநாட்டவர்கள் விவரங்களை பதிவு கட்டாயம்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
வேலூரில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளிநாட்டவர்கள் விவரங்களை பதிவு கட்டாயம் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
வேலூர் மாநகர பகுதியில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் வந்து தங்குகின்றனர். தங்க வரும் வெளிநாட்டவர்கள் குறித்த முழு விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.உறவினர்கள் நண்பர்கள் என கூறிக்கொண்டு விவரம் பதிவு செய்யாமல் யாரையும் தங்க அனுமதிக்க கூடாது.
அவ்வாறு பதிவு செய்த விவரங்களை போலீசாரிடம் அளிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வெளிப்புறம் மற்றும் உள்புறம் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விடுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






