என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்12 April 2022 6:16 AM GMT (Updated: 12 April 2022 6:16 AM GMT)
லாஸ்பேட்டையில் கல்லூரி மானவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள பூங்கா அருகே கல்லூரி-பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யபடுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திர சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தன.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது அவர்களது சட்டைப் பையில் சிறு சிறு பொட்டலங்களாக 600கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
இதை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து பிடிபட்ட 4பேரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த ஜான் (24) லாஸ்பேட்டை குமரன் நகரை சேர்ந்த பிரகாஷ் (24) மற்றும் ருத்ரகுமார், பிரவின் என்பதும் தப்பி ஓடியவர் பாரத் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய பாரத்தை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X