search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கணவரின்குடிப்பழக்கத்தால் பெண் தற்கொலை

    காவேரிப்பட்டணம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி
    காவேரிப்பட்டணம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால்
    பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் மணிக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் கணவரை விட்டு ரேணுகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கடந்த 1 வருடமாக தாய் வீட்டில் ரேணுகா மனமுடைந்து காணப்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார்  வழக்குபதிவு செய்தனர்.மேலும் ரேணுகாவுக்கு திருமணமாகி 4 வருடம் ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×